ஞாயிறு, 11 டிசம்பர், 2011

ஒவ்வொருவரும் எண்ணுகிறார்

ஒவ்வொருவரும் தான் மட்டுமே வாழ்வதாக எண்ணுகிறார்

ஒவ்வொருவரும் தான் மட்டுமே வாழ்வை
ஆழ்ந்து அனுபவிப்பதாக
அனுபவித்து அறிந்ததாக
அறிந்து வாழ்வதாக

ஒவ்வொருவரும் தான் மட்டுமே வாழ்வில்
சரியான முடிவெடுப்பதாக
முடிவெடுப்பது பிறருக்கென
பிறருக்கு உழைப்பதாக

ஒவ்வொருவரும் தான் மட்டுமே வாழ்வின்
பாடங்களை படித்ததாக
அர்த்தம் புரிந்ததாக
இன்பக்கரை கண்டதாக

ஒவ்வொருவரும் தான் மட்டுமே மற்றவரின்
வலிகள் புரிந்தவராக
வலியின் காரணம் தெரிந்தவராக
காரணத்தின் நியாயம் உணர்ந்தவராக

ஒவ்வொருவரும் தான் மட்டுமே மற்றவருக்கு
எது தேவை என்றறிந்தவராக
எது பாடம் என்றுணர்த்துபவராக
எது அன்பு என்று காட்டுபவராக

ஒவ்வொருவரும் தான் மட்டுமே மற்றவரால்
ஏமாற்றப்படுவதாக
துன்பப்படுவதாக
ஞானம் அடைவதாக

சிலர் மட்டும் தான் சும்மா இருந்து
எண்ணங்கள் உயர்த்துமென்றும்
எண்ணங்கள் தாழ்த்துமென்றும்
வாழ்வை மறைக்குமென்றும்  

கருத்துகள் இல்லை: