வியாழன், 29 செப்டம்பர், 2011

அறியும் மெய்



இத்தனை பேர் இங்கெதற்கு 
ஏன் இந்த கூச்சல் குழப்பம் 

பதிலில்லா கேள்விகள் அசைபட 
பதிவான நிகழ்வுகள் அரைபட 

வார்த்தைக்கொரு உணர்வு வெளிப்பட
வாழ்க்கை முன்னும்பின்னும் அலைந்திட 

கனவுகள் நிறைந்த அந்த இன்பக்காலம் 
கடவுளை வேண்டல் மட்டும் துன்பக்காலம் 

ஆயத்தங்களையும் பாவனைகளையும் 
வாழ்வு என்றே மனம் ஏற்கிறது 

காலைக்குள் மாற்ற ஒன்றுமில்லை 
கண்மூடி கிடந்தாலும் தூக்கமில்லை 

தாகமோவென தண்ணீர் குடித்து 
சந்தேகத்திற்கு மீண்டும் கழித்து 

அசையாது பிணம்போல கிடந்து பார்த்து 
ஐம்பதிலிருந்து ஒன்று எண்ணிப்பார்த்து 

தள்ளி குப்பற மல்லாக்க சாய்ந்து 
தலையணை தலைகால் இடம் மாற்றி 

ஆயத்தங்களையும் பாவனைகளையும் 
தூக்கம் என்று உடல் ஏற்பதில்லை 

கருத்துகள் இல்லை: