சத்தமாக அழுதுகொண்டிருந்தது
தாயின் கையிலிருந்த குழந்தை
புன்னகையுடன் கொஞ்சும் தாய்
புன்னகை பூக்குது எனக்கும்
யாருடனோ புன்னகை பகிர்வதை
யாரது தடுப்பது உள்ளிருந்து
கதறி அழுதுகொண்டிருந்தது
கையில் குழந்தையுடன் தாய்
விறைத்துக் கொண்டிருக்கும் குழந்தை
விளிம்பில் நிற்கும் என் கண்ணீர்
யாருடனோ கண்ணீர் பகிர்வதை
யாரது தடுப்பது உள்ளிருந்து
கண்ணெதிரே சுகதுக்கம் பார்த்தால்
கண்ணீரோடு பகிரசொல்வதா
ஊர்முன்னே உணர்ச்சியின்றி உயரே
உடையாது நிற்க வைப்பதா
இரண்டுமே நான்தானா
இறுதியில் எதுதான் நான்
இன்றும் காட்சி நிற்கிறது
ஏழாம் மாதம் அவசரமாய் வந்துபோன
ஒருமகனை கையிலேந்தி
உடையாது நின்றிருந்தேன்
மண்ணில் புதைக்குமுன்னே
முதல்முத்தம் தரும்வரையில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக