ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

ஏன்

ஏன் உன் மௌனத்தை அழைத்தே கெடுத்தேன்
ஏன் உன்னிடம் எதையாவது கேட்டுக் கொண்டேயிருந்தேன்
ஏன் உன்னை பார்க்கும் போதெல்லாம் புலம்பினேன் 

ஏன் நீ செய்ய பட்டியல் போட்டுக் கொண்டேயிருந்தேன்
ஏன் நீ செய்யாதவற்றிற்கு ஏமாந்து அழுதேன்
ஏன் நீ காட்டிய பாதையில் செல்லாமல் இருந்தேன்

ஏன் எனக்கு நீ கற்றுத் தந்தவற்றை மறந்தேன்
ஏன் எனக்கு நீ நிகழ்த்திய அற்புதங்களை மறந்தேன்
ஏன் எனக்கு நீ தந்த வாழ்க்கையை மறந்தேன்

ஏன் நான் உன் மீது கோபம் வளர்த்தேன்
ஏன் நான் உன் அண்மை போனதென நினைத்தேன்
ஏன் நான் உன் சொல்கேட்கும் அமைதி இழந்தேன்

என் புண்ணியமோ பாக்கியமோ
என்னை மன்னித்துக் கொண்டேயிருக்கிறாய்
என் நன்றிகளே இனி என் உணர்வுகள்  

கருத்துகள் இல்லை: