ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

மாயை

அனுபவ விழைவாக
அழைத்திடும் உடுவாக
மறுபுல மழையாக
மண்ணுள் புதையலாக
என்முன் வந்தது

அனுபவம் புதிதாக
இதந்தரு நிலவாக
வறட்சிக்கு நீராக
வயலுக்கு உரமாக
என்னிடம் சேர்ந்தது

அனுபவம் பழக்கமாக
கூசிடும் வெயிலாக
கடலின் அலையாக
தோப்பில் பாறையாக
என்னுடன் இருந்தது

அனுபவம் பதியாமல் 
மறைந்த எரிகல்லாக
கடலில் மழையாக
கண்ணில் மணலாக
என்னைவிட்டு போனது

அனுபவம் போதுமென
நிறம் மாறும் வானாக
வற்றாத ஊற்றாக
தாங்கும் நிலமாக
என்னில் நானே நின்றது 

கருத்துகள் இல்லை: