புதன், 6 ஆகஸ்ட், 2014

நீ

இசைத்தெழுப்பும் குயிலும் நீ
இருள்நீக்கும் கதிரும் நீ
மனம் உருக்கும் பனியும் நீ
மனம் மலர்த்தும் மலரும் நீ

கால்  போகும் பாதையும் நீ
வியர்க்க வைக்கும் வெயிலும் நீ
சிலிர்க்க வைக்கும் காற்றும் நீ
அயர்ச்சி போக்கும் இளநீரும் நீ

முதலில் தோன்றும் தாரா நீ
மேல்கீழ் வான சிகப்பும் நீ
மயக்கும் மண மலரும் நீ
மெய் தேடும் ஓய்வும் நீ

வழி காட்டும் நிலவும் நீ
வழி சேரும் இடமும் நீ
நான் சாயும் மடியும் நீ
நான் மறக்கும் தூக்கம் நீ 

கருத்துகள் இல்லை: