ஞாயிறு, 21 டிசம்பர், 2008
புதன், 3 டிசம்பர், 2008
தொலைத்தாலும்
சிறு கவனச் சிதறலில் காணாது மறைந்தாலும்
சுகசுகந்த சுவடுடன் மறந்த என்புதுக்கவிதைகள்
சாதி ஒழிக்கும் புதுசமூகநீதி
பழித்தார்கள் இழித்தார்கள் அச்சாதிவெறியர்கள் காலம்மாறி
பலனுக்காக எம்சாதியை உரக்கக்கத்தி அவரை இழித்துப்பழிக்கிறோம்
குழுக்கூட்டம்
கவனமான பார்வைத்தவிர்ப்பு நகம் சுவர் ஆராய்ச்சி
கூடிப்பேச வந்தவர்களின் துவக்கத்திற்கான காத்திருத்தல்
வெள்ளி, 28 நவம்பர், 2008
முகங்கள்
எத்தனை முறைநான் எத்தனை முறைநான்
எந்தன் பிம்பம் பார்த்திருப்பேன்
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு முகமே தெரிகிறதே
எத்தனை முகங்கள் எத்தனை முகங்கள்
என்னசல் முகம்தான் இதிலெதுவோ
ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு முகமும்
பிறர்க்கு செய்த முகந்தானே
ஒன்று உன் காலைக்கு ஒன்று உன் மாலைக்கு
ஒன்றுண்டு ஒவ்வொருவர் வேளைக்கும்
ஒன்று உன் உவப்பிற்கு ஒன்று உன் உவர்ப்பிற்கு
ஒன்றுண்டு ஒவ்வொருவர் உணர்விற்கும்
ஒன்று என் உழைப்பிற்கு ஒன்று என் பிழைப்பிற்கு
ஒன்றுண்டு ஒவ்வொரு தொடர்புக்கும்
மீண்டும் பிம்பம் பார்க்க மீண்டும் பிம்பம் பார்க்க
எனக்கென முகமே இருக்காதோ
நீயும் பிம்பம் பார் நீயும் பிம்பம் பார்
உன்முகம் சில நான் பார்த்திருக்கேன்
இந்த என்முகம் இந்த என்முகம்
பார்த்ததுமே நீ கரைந்திடுவாய்
அந்த என்முகம் அந்த என்முகம்
பார்த்ததுமே நீ உறைந்திடுவாய்
ஐயோ அந்தமுகம் ஐயோ இந்தமுகம்
காட்டவே மாட்டேன் நானுனக்கு
உனக்கு அந்தமுகம் உனக்கு இந்தமுகம்
அறிந்திடல்தான் உன்னை புரிந்திடலோ
உந்தன் அந்தமுகம் உந்தன் இந்தமுகம்
பிடித்திடல்தான் உறவு நிலைத்திடலோ
இது ஓருலகம் அது ஓருலகம்
அது பெற்றது
இது மூன்று
அது முப்பது
இது இளம்விரல்
அது கைகளில்
இது வளருது
அது வளர்க்குது
இது இளஞ்சாரல்
அது பெருங்காற்று
இது இட்டுச்செல்லும்
அது அன்பில்செல்லும்
இது அண்டிச்செல்லும்
அது அழைத்துச்செல்லும்
இது உயரப்போகும்
அது உருகிப்போகும்
இது கடிந்துக் கொள்ளும்
அது சிரித்துக் கொள்ளும்
இது மிரண்டு போகும்
அது மிரட்டிப் பார்க்கும்
இது கசங்கிப்போகும்
அது கசந்துப்பார்க்கும்
இது அதுவன்றி வாழும்
அது இதுவன்றி வாடும்
இது அப்போது
அது இப்போது
இது மலர்ந்தது
அது காய்க்குது
இது அதுவானது
அது இதுவாக்குது
இது பிறந்தது
அது பெற்றது
குமரி
வார்த்தை வெளுத்துப்போனதே
கவிதையாகக் கோர்த்துப்பார்த்தேன்
கருத்து வழுக்கிப்போனதே
எழுத்தினாலே சொல்லிப்பார்த்தேன்
ஏதும் விளங்கவில்லையே
மௌனமாகக் கேட்டுப்பார்த்தேன்
முகமலர்ந்தாள் குமரியே
சிலுவை
சிறுபிள்ளையாய் நானும்
சுமந்துதிரிந்த தாமிந்த
சிலுவையெனை அறையுமுன்னே
தேவனே இரட்சிப்பீர்
வியாழன், 27 நவம்பர், 2008
நிஷாவும் வெள்ளையனும்
வெள்ளையனைப் போல வேண்ட வைத்தது
மழையே போ போ வேறொரு நாள் வா வா
புதன், 26 நவம்பர், 2008
அனைவருக்கும் சமமாய்
அவன் கேட்கும் முன்னமே தந்துவிட்டேன்
அவசரமாய் இலவச அறிவுரைகள்
தேசியகீத சந்தந்திற்கு எழுதியது
நில்தவம் செய்மண் வரையே
வாழ்விக்கும் தாயே திருநாடே இறையே
என தினம் போற்றிடு வோமே
இந்தியர் அனைவரும் ஒருதாய் மக்கள்
நாமிதை அறிவோம் நிஜமே
மதம் இனம் ஜாதி என்றே
பலப் பல நம்முள் பங்கும்
என்றும் இதை எதிர்ப்போமே
உழை உயிர் கூட்டினில் நின்றிடும் வரையே
பாரதம் காக்க உழைப்போம்
உழைப்போம் உயர்வோம் ஜெயிப்போம்
சரித் திரத் திலே நிலைப்போம்
நல்நட்புகள்
மறைத்தேன் முகத்தை அப்புறம் திருப்பி
துடைத்தேன் துளிர்த்த கண்ணீர் துளி
திங்கள், 24 நவம்பர், 2008
கவிதைக்கு நேரம்
அண்டிப் பிழைத்த எங்காளு நம்மூரில் ஆடிப்போக
வாய்த்தது எனக்கு கவிதை எழுத நேரம்
புதிய கறுப்பர்
நம்மாளு வென்றான் என நம்மாளு மகிழ
தான் கறுப்பன் எனப்புதிதாய் நினைக்கும் மேலடிமைகள்
ஞாயிறு, 23 நவம்பர், 2008
கூட்டுக்களி
மற்றவர்சொல் காதுள் நுழைந்தும் மனமடையாது
கூடிக்களித்ததாக மறுநாள் அயர்ச்சியில் நினைப்பு
சனி, 22 நவம்பர், 2008
பிரிவு
கணக்கொன்று வாய்த்து நித்தம்
நானெழுதி மகிழ்கையில் இந்த
நரர்க்கெல்லாம் ஏன் வருத்தம்
மற்றக் கடனெல்லாம் தனித்தனியே
மனதைக் கலக்கையிலே உன்னிடம்
பட்டக் கடன் வானைத் தாண்டியும்
பெருமிதம் தருவது ஏன் நித்தம்
எழுதி எழுதி கூட்டிக் கழித்து
எண்களில் குழம்பி காண்பார் லாபத்தை
காகிதத்தில் எண்களில் அடங்கா கணக்கை
கண்டதும் லாபமென்றது ஏன் சித்தம்
மொத்த ஏன்களுக்கும்
முழுதும் ஒருபதில்
மச்சம் என்கிறது
மச்ச சாஸ்திரம்
குயிலுக்கங்கே விடிந்துவிட்டது
கூவியுரைக்குது ஊருக்கெல்லாம்
நீயில்லா எனக்கு மட்டும்
நீள்கிறது இந்த மாலை
கொசுவும் ஒரு தூக்கம் போட்டு
குருதிப்பசியுடன் பறக்குதிங்கே
நினைவில் நீயாட பறக்குதிங்கே
நேரக்கணக்கும் உறக்கமுமே
உடுக்களும் கண்சிமிட்டி ஓய்ந்து
ஒளியப்பார்க்குது வானில் எங்கோ
கண்மட்டும் வானை வெறிக்க
காணுது மனம் உன்னை மட்டும்
சூரியனும் தூக்கம் முடிந்து
சிவப்பாய் கீழே எழ
கண்ணிரண்டும் சிவந்து நானும்
களைத்து எழுந்தேன் உறங்காமல்
காதலலை மனசைத் தாக்க குலைந்து
காகிதத்தில் வடிக்க எண்ணி எழுதி
சரியா என்று படித்துப் பார்த்தால்
சாரல் மட்டும் தெளிச்சிருக்கு
மனதிலுள்ள உணர்ச்சி எல்லாம்
வாயால் சொல்ல முயற்சி செய்ய
ஓய்ந்தது வாய் சொச்சம் சொல்லி
ஒளிந்திருக்கு பனிப்பாறை மிச்சம் உள்ளே
பிரிந்திருக்கும் இந்த நேரம்
பாரமாகி அழுத்தும் மனம்
புரிய வைத்தது ஒரு நிஜம்
பூரணமாய் உள்ளே உள்ளாய்
யுகங்கள் பிரிந்தால் வருடங்கள்
வருடங்கள் பிரிந்தால் நாட்கள்
நாட்கள் பிரிந்தால் வினாடிகள்
நாம்பிரிந்தால் வினாடி யுகங்கள்
கோடைப் பெருமூச்சு
நீர்விழுது விட
அலையும் மேகமெல்லாம்
ஆனந்த நீர்சொரிய
கொடிசெடி மரமெல்லாம்
கோடை அழுக்கைக் கழுவி
புத்துணர்வு கொண்டு
புதுப் பச்சை இலைவிட
உடல் குளிருடன்
உள்ளம் தினவெடுத்து
கவிதை பலபாடிடும்
கார்கால நினைவுடன்
வாட்டும் கோடையின்
வெய்யில் அனலின்
வெப்பம் தாளாது
வியர்வையில் நனைந்தமேனி
பழம்நினைவினால் வந்த
பெருமூச்சால் காய்கிறது
சகோதரனே
துன்பத்தில் இருக்கலாம் நீ
சோகத்தில் மிதக்கலாம் நீ
துன்பத்தையும் சோகத்தையும்
நினைப்பதால் மட்டும்
நீங்கிடுமா அவை
அடியெடுத்து வைக்குமுன்னே
அவ்விடத்தை நீபார்
அடியெடுத்து வைத்தபின்னே
அடுத்த இடம் பார்
அடியெடுத்து வைத்தபின்னும்
அவ்விடத்தைப் பார்த்திருந்தால்
அடுத்த அடி எப்போது
அப்படியே நிற்பாயே
புதுகவிகளுள் சிலர்
புலம்பலையே சொத்தாக
பேணிவருதல் போல
பேதையாய் மாறிடாதே
கண்ணிலே நீர்வந்தால்
காண்பாயோ பாதையை
கடல்நீர் உப்பிருக்க
கண்ணீர் உப்பெதற்கு
கண்ணீர் இனிவேண்டா
கவலைகள் இனிவேண்டா
குன்றுகளைத் தகர்த்து
குழிகளை நிரப்பிடுவோம்
குழிகள் பலயிருக்க
குன்றுகள் எதற்கு
குன்றினுச்சியில் நின்று
குழிகளை எண்ணவோ
கனல்வார்த்தைகள் பல
காதில் விழுந்தால் போதுமா
குறட்டைவிடும் அறிவினை
கொளுத்தித்தான் பாரேன்
சுடர் விட்டெரியும்
சூடு எங்கும் பரவும்
சுறுசுறுப்பாய் புதுக்குருதி
சுருதியுடன் பாயும்
மூளைக்குள்ளே ஆயுதம்பல
முடங்கியதை அறிவாய்
மேகமென நீஎழுந்து
மேருவையே தகர்ப்பாய்
பழையதென்றும் புளிக்கும்
புதியதுதான் இனிக்கும்
பழையதை மறந்து
புதுவாழ்வு துவங்கிடு
என் பிரியமுள்ள எதிரிகளே
மென்மையான இரக்கமற்றோரே
பிரியமுள்ள எதிரிகளே எனை
வெறுத்தொதுக்கும் நண்பர்களே
நான்
அனிச்சம் போன்றவன்
விருந்தினனாக இருக்கையில் மட்டுமல்ல
விருநதளிக்கையிலும் தன்
என்னிதய மலரை சிலர்
கொள்ளிகட்டையால் போசுக்குகின்றனர்
கொடுமைக்காரர்கள்
ஆனால்
நீங்கள் மென்மையானவராயிற்றே
அதனால் தான்
மணம் வீசும் ஊதுபத்தி
முனைகொண்டு முத்தமிடுகின்றீர்
நான் செல்லும் பாதை
காட்டுப்பாதை
பலர் என்பாதை முட்களை
கண்டும் காணாது போகின்றனர்
ஆனால்
நீங்கள் என் பிரியமுள்ளவராயிற்றே
அதனால் தான்
ரோஜா செடிஎடுத்து
மலரை பறித்துவிட்டு
மீதியை பாதையில் வீசுகின்றீர்
நான் போரிடும் களத்தில்
பலர் முன்னின்று குத்துகின்றனர்
வீர எதிரிகள்
ஆனால்
நீங்கள் என் நண்பராயிற்றே
அதனால் தான்
என்மார்பு வலிக்குமென்று
பின்னின்று குத்துகின்றீர்
நீங்கள் தந்த அனுபவங்களுக்கு
நன்றிகள் பலகோடி
புதன், 5 நவம்பர், 2008
தமிழனும் தமிழும்
பொய்யுரை பச்சை தமிழர் எத்தனை பேர்
சமயமற்ற தமிழ் படிப்பதன் பலனோ
குற்ற விரயம்
தெய்வமாக்கப்படும் தமிழ் பெண்கள் மறுபுறம்
மாநகர பேருந்தில் நிமிட ஈர பலாத்காரங்கள்
தேடல்
மனதாலும் செயலாலும் எத்தனை ஏற்பாடுகள்
நீயே என் கடவுள் ஆகி விடுவாயோ
முதலும் முடிவும் ஒன்றோ
முதல் போலவே முடிவும் தெரிய
மின்வண்டி நிலையங்கள் எல்லாம் ஒரேமாதிரிதான்
துளி மரணம்
மரணமும் நல்லனுபவம் என காட்டுதோ
வெளியில் இருந்து உள் செல்லும் போதை
கிரகங்கள்
எங்க கிரகங்கள் ஒன்று சேர்ந்தால் பெரிய குடும்பம்
ஒரு மேடையில் நின்றாலும் ஒவ்வொரு திசை பார்க்கும்
செதுக்கல்கள்
ஆயிரத்தைநூறு ஆண்டுகளாய் இயற்கை செதுக்கியது
மகாபலிபுரச்சிற்ப அழகே அழகு
கொண்டு வந்ததை கொண்டு போ
கொண்டு வந்ததை கொண்டு போ
காற்றே அந்தமேகம் மறைக்குதென்நிலவை
செவ்வாய், 4 நவம்பர், 2008
கழுதையும் நானும் வேற்றுமை ௧
மணிக்கணக்காய்இயற்கைக்கு எதிராயுழைப்பேன்
சனி, 1 நவம்பர், 2008
Mudhal Murayai
இத்தனை சுலபம் என அறியாது ...
நானும் blog எழுதுறேன் ...
மனதில் தோன்றியதை எழுதி ஒரு விதமாய் லேபல் ஒட்டி தருவேன்
கழுதை என்று திட்டு வாங்காத தமிழன், தமிழ்நாட்டில் வளர்ந்திருக்க முடியாது. அதனால் நான் மனிதனுக்கும், மிருகத்திற்கும் இடையே காணும் வேற்றுமை ஒற்றுமைகளை, கழுதையையும் என்னையும் ஒப்பிட்டு எழுதுவேன்.
Punctuation marks எதுவும் எந்த போஸ்டிலும் இருக்காது. அவரவர் தமிழறிவிற்கேற்ப குறிகளால் பிரியாத தமிழ் வார்த்தைகளை பலவாறு கோர்த்து விளையாடும் தமிழ்விளையாட்டு கெட்டுவிடும் என நினைக்கிறேன்.
போதனை எதுவும் இருக்காது (மாணவப் பருவத்தில் தோன்றியதைத்தவிர). என் அனுபவங்கள், கேள்விகள், வடுக்கள் போன்றவற்றை என்காட்டுத்தமிழ்தேன் தடவி பகிர்ந்து கொள்வேன். நீங்களும் தயவு செய்து உங்கள் பதில்களையும், எண்ணங்களையும் பதிவு செய்யுங்கள்.
கல்தோன்றி மண்தோன்றா காலத்திலிருந்து தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது...
தமிழ் அதுவாய் வாழும்
முடிந்தால் தமிழால் வாழ்வோம்