சனி, 22 நவம்பர், 2008

கோடைப் பெருமூச்சு

நிற்கும் மரமெல்லாம்
நீர்விழுது விட
அலையும் மேகமெல்லாம்
ஆனந்த நீர்சொரிய
கொடிசெடி மரமெல்லாம்
கோடை அழுக்கைக் கழுவி
புத்துணர்வு கொண்டு
புதுப் பச்சை இலைவிட
உடல் குளிருடன்
உள்ளம் தினவெடுத்து
கவிதை பலபாடிடும்
கார்கால நினைவுடன்
வாட்டும் கோடையின்
வெய்யில் அனலின்
வெப்பம் தாளாது
வியர்வையில் நனைந்தமேனி
பழம்நினைவினால் வந்த
பெருமூச்சால் காய்கிறது

கருத்துகள் இல்லை: