சனி, 22 நவம்பர், 2008

என் பிரியமுள்ள எதிரிகளே

அன்புள்ள
மென்மையான இரக்கமற்றோரே
பிரியமுள்ள எதிரிகளே எனை
வெறுத்தொதுக்கும் நண்பர்களே

நான்
அனிச்சம் போன்றவன்
விருந்தினனாக இருக்கையில் மட்டுமல்ல
விருநதளிக்கையிலும் தன்

என்னிதய மலரை சிலர்
கொள்ளிகட்டையால் போசுக்குகின்றனர்
கொடுமைக்காரர்கள்
ஆனால்
நீங்கள் மென்மையானவராயிற்றே
அதனால் தான்
மணம் வீசும் ஊதுபத்தி
முனைகொண்டு முத்தமிடுகின்றீர்

நான் செல்லும் பாதை
காட்டுப்பாதை
பலர் என்பாதை முட்களை
கண்டும் காணாது போகின்றனர்
ஆனால்
நீங்கள் என் பிரியமுள்ளவராயிற்றே
அதனால் தான்
ரோஜா செடிஎடுத்து
மலரை பறித்துவிட்டு
மீதியை பாதையில் வீசுகின்றீர்

நான் போரிடும் களத்தில்
பலர் முன்னின்று குத்துகின்றனர்
வீர எதிரிகள்
ஆனால்
நீங்கள் என் நண்பராயிற்றே
அதனால் தான்
என்மார்பு வலிக்குமென்று
பின்னின்று குத்துகின்றீர்

நீங்கள் தந்த அனுபவங்களுக்கு
நன்றிகள் பலகோடி

2 கருத்துகள்:

தமிழ்மணி சொன்னது…

வலியை மறக்கும் வழி உங்களுக்கு தெரிந்திருக்கிறது

மனிதன் என்பவன் கடவுளாகலாம் சொன்னது…

நீங்க படிச்சு யோசிச்சிங்களா - இல்ல
யோசிச்சு படிசிங்கலானு தெரியல - ஆனா
எனக்கு எதுவும் புரியல .
---- கடவுள் .